திரிபுரா மற்றும் பிற வடகிழக்கு இந்திய மாநிலங்களில் உள்ள வணிகர்களுக்கு சரக்குகளை கொண்டு செல்வதற்கான நான்கு வழித்தடங்களை வங்காளதேச அரசாங்கம் அங்கீகரித்துள்ளது.
சிட்டகாங் துறைமுகம்-அகௌரா-அகர்தலா, மோங்லா துறைமுகம்-அகௌரா-அகர்தலா, சிட்டகாங்-பிபிர்பஜார்-ஸ்ரீமந்தபூர், மற்றும் மோங்லா துறைமுகம்-பிபிர்பஜார்-ஸ்ரீமந்தபூர் ஆகிய நான்கு வழித்தடங்கள் ஒப்புதல் பெற்றிருகிறது. திரிபுராவின் தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் சந்தனா சக்மா கூறுகையில், இந்தியாவும் வங்காளதேசமும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. சிட்டகாங் மற்றும் மோங்லா துறைமுகங்கள் வழியாக இந்திய வர்த்தகர்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வங்காளதேசமும் இந்தியாவும் ஒப்புக்கொண்டனர் என்றார்.
மேலும், உள்ளூர் அளவில் இருதரப்பு வர்த்தகத்திற்காக திரிபுரா ஒன்பது எல்லை நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.