தமிழகத்தில் நடைபெற உள்ள தேர்தலில் பாதுகாப்பு பணிக்காக கேரளா மற்றும் ஆந்திராவில் இருந்து பத்தாயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் 19 ஆம் தேதி நடை பெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அமைதியான தேர்வு முறையில் தேர்தலை நடத்த பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதில் தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் 1 1/2 லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.இந்நிலையம் கேரளா மற்றும் ஆந்திராவில் உள்ள 10000 போலீசார் தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பிற்காக அழைத்துவரப்பட்டு இருக்கின்றனர். இவர்கள் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர ஊர் காவல் படை, தமிழ்நாடு சிறப்பு படையினர், ஆயுதப்படை காவலர்கள் ஆகியோரும் தேர்தல் பணியில் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட உள்ளனர்.