செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் சுமார் 14.21 கோடி மதிப்பிலான அமைச்சர் பொன்முடியின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பொன்முடி செம்மண் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவு செம்மண் அள்ளிய வழக்கு காரணமாக அவரது 14.21 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. முன்னாள் எம்.பி கௌதம சிகாமணி தொடர்புடைய வழக்கில் அமலாக்கத்துறை அதிரடியாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதேபோன்று அமைச்சர் பொன்முடி, அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.