சீனாவில் கனமழை காரணமாக 15 பேர் பலியாகியுள்ளனர்.
சீனாவில் கேமி புயலால் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் கிழக்கு பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. பூஹான் மாகாணத்தில் கடும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். இதில் ஆறு பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கேமி புயல் சீனாவை அடைவதற்கு முன் பிலிப்பைன்ஸில் 34 பேரை பலி கொண்டது.