கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தைப் பகிர்ந்து கொண்டு, ஏர்டெல் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் தொடர்பு வசதிகள் முற்றிலும் செயலிழந்துள்ள இக்கட்டான சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களின் தொடர்பை இழக்காமல் இருக்கவும், உதவிப் பணிகளில் ஈடுபடுபவர்களுடன் தொடர்பு கொள்ள வசதியாகவும், ஏர்டெல் மூன்று நாட்களுக்கு இலவச அழைப்பு, எஸ்எம்எஸ் மற்றும் தரவு சேவைகளை வழங்கியுள்ளது. அதன்படி வேலிடிட்டி முடிவடைந்த, ரீசார்ஜ் செய்ய முடியாதவர்களுக்கு 3 நாட்களுக்கு 1 ஜிபி மொபைல் டேட்டா, அன்லிமிட்டெட் கால், 100 எஸ் எம் எஸ் இலவசமாக வழங்கப்பட உள்ளது. மேலும் போஸ்ட்பெய்டு பயனர்களுக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.