மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேலைகளில் மத்திய அரசு பல்வேறு முக்கிய திட்டங்களையும், அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. அவ்வகையில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. அதில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அகவிலைப்படி 50 சதவீதமாக உயரும். இந்த அகவிலைப்படி உயர்வு 2024 ஜனவரி 1 முதல் கணக்கிடப்பட்டு அளிக்கப்பட உள்ளது.