தைவானில் ஹைகுவி புயல் காரணமாக 45 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தைவானின் கிழக்கு கடற்கரையில் உள்ள டைடுங்க் பகுதியில் ஹைக்குவி புயல் கரையை கடந்தது. இதனால் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. கனமழை காரணமாக ஏற்பட்ட இடுப்பாடுகளில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தைவானில் 45 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சுமார் 7000 பேர் பாதுகாப்பு காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர் என அரசு தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அவசியம் இன்றி வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.