சிக்கிமில் கன மழை காரணமாக நிலச்சரிவுகள் ஏற்பட்டது.
சிக்கிம் மாநிலத்தில் உள்ள மாங்கன் மாவட்டத்தில் பெய்த கன மழையின் காரணமாக மலைப்பகுதிகளில் பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டது. இங்கு சுற்றுலா தளங்களுக்கு செல்லும் முக்கிய சாலைகள் தண்டிக்கப்பட்டன. இங்கு சுற்றுலா பயணிகள் சுமார் 1200 பேர் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் கனமழை காரணமாக பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் நீர் புகுந்துள்ளது. மின்சாரம், தகவல் தொடர்பு ஆகியவை துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி ஒன்பது பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. சிக்கியுள்ள மக்களை நீக்கும் பணியில் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்து வருகின்றனர்