கென்யாவில் பள்ளி விடுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயில் 17 மாணவர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள கென்யா நாட்டின் நெய்ரி நகரில் ஹில்சைட் எண்டர்சா என்ற பள்ளிக்கூடம் செயல்படுகிறது. இதில் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில், மாணவர்கள் தங்குவதற்கான விடுதி உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு அந்த விடுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயில் 17 மாணவர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 13 மாணவர்கள் தீக்காயங்களால் பாதிக்கப்பட்டனர். தகவல் அறிந்து உடனடியாக வந்த போலீசாரும் தீயணைப்புத்துறையினரும், தீயை அணைத்துவிட்டு, காயமடைந்த மாணவர்களை மீட்டனர். மீட்கப்பட்ட மாணவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். தீ விபத்தின் காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.