பிரசாந்த் கிஷோர் பீகாரில் புதிய கட்சியை தொடங்கி உள்ளார்.
பீகார் மாநிலத்தில் பிரசாந்த் கிஷோர், முதன்மை தேர்தல் வியூக நிபுணராக அறியப்பட்டவர். இவர் தற்போது, சட்டசபை தேர்தலுக்காக புதிய கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். அவரது கட்சிக்கு "ஜன் சூராஜ்" என பெயர் சூட்டப்பட்டுள்ளது. 2025-ம் ஆண்டில் நடைபெறும் சட்டசபை தேர்தலுக்கான தயாரிப்பாக, அவர் தனது கட்சியை 2-ந்தேதி தொடங்க உள்ளதாக கூறியுள்ளார்.
பாட்னாவில் உள்ள அவரது அமைப்பின் நிர்வாகிகளுடன் உரையாற்றும் போது, "இந்த புதிய கட்சி பீகார் மக்களின் கூட்டுறவாக அமைய வேண்டும். எந்த குறிப்பிட்ட சாதி அல்லது குடும்பத்தைச் சார்ந்ததாக அல்ல. நாம் வரலாற்றில் இடம் பிடிப்போம்" என்றார்.