தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் உதவி வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் உதவி தொகை வழங்கும் திட்டம் ஆகஸ்ட் மாதம் முதல் தமிழக முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழ் புதல்வன் திட்டத்தில் பயன்பெற ஆதார் எண் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகுதியான மாணவர்கள் ஆதார் எண் வைத்திருக்கும் பட்சத்தில் அதற்கான மேல் நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று இது குறித்த அனைத்து தகவல்களும் மாணவர்களுக்கு தெரியும் வகையில் கல்வி நிறுவனங்கள் விளம்பரப்படுத்த வேண்டும் எனவும், அருகில் உள்ள ஆதார் மையங்களுக்கு சென்று ஆதார் எண்ணை எடுக்க மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.