டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாடு தழுவிய உண்ணாவிரத போராட்டத்தை ஆம் ஆத்மி கட்சியினர் அறிவித்துள்ளனர்.
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் இவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இவரது நீதிமன்ற காவல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் 31ஆம் தேதி டெல்லியில் ராம் லீலா மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியினர் நேற்று நாடு தழுவிய உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.