ஆவின் நிறுவனத்தின் நெய் மற்றும் வெண்ணெய் விலை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.
ஆவின் நிறுவனம் நாளொன்றுக்கு 25 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்கின்றது. இதில் சென்னையில் மட்டும் 11 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது. ஆவின் பால் மற்றும் இன்றி பால் பொருட்களான பால்கோவா நெய் மற்றும் பல இனிப்பு வகைகளையும் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விலையை உயர்த்தியுள்ளது. இதில் 15 மில்லி நெய்யின் புதிய விலை 15 ஆகவும், 15 கிலோ நெய்யின் விலை 15550 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் வெண்ணெய் 100 கிராம் ரூபாய் 60 ஆகவும், 500 கிராம் 275 ரூபாய் வரையில் விற்கபட உள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வருவதாக ஆவின் தெரிவித்துள்ளது.