2023 ஆம் ஆண்டிற்கான அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு சாதனை ஊக்க தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களில் 200 நாட்கள் மற்றும் அதற்கு மேல் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ருபாய் 625 ஊக்கத்தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதே போன்று தொடர்ந்து 151 நாள் முதல் 199 நாட்கள் வரை பணியாற்றிய ஊழியர்களுக்கு 195 ரூபாயும், 91 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை பணிபுரிந்தவர்களுக்கு ரூபாய் 85 வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சாதனை ஊக்க தொகை பெற ஒழுங்கு நடவடிக்கை தொடரப்பட்ட ஊழியர்கள் தகுதி அற்றவர்கள் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. அதேபோன்று போக்குவரத்து கழகத்தின் ஆண்டின் கடைசி நாளில் ஊழியர் பணியில் இருக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.