வேத காலத்தின் மிகப் பழமையான சமஸ்கிருத நூலான ரிக் வேதத்தில், சூரிய கிரகணம் பற்றிய குறிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கிமு 1500 ஆம் ஆண்டு வாக்கில் தொகுக்கப்பட்ட ரிக் வேதத்தில், சூரிய கிரகணம் என்பது இருளால் குத்தப்படுதல் என்பதாக விவரிக்கப்பட்டுள்ளது.
ஓரியன் மற்றும் பிளையடீஸ் ஆகியவற்றில் வசந்த சமயத்தைக் குறிக்கும் இந்த நூலின் குறிப்புகள், இந்த நிகழ்வுகளை கி.மு. 4202 அல்லது கி.மு. 3811 ஆம் ஆண்டுகளில் நிகழ்வதாக கூறுகின்றன. ஜர்னல் ஆஃப் அஸ்ட்ரோனாமிகல் ஹிஸ்டரி அண்ட் ஹெரிடேஜ் இதழில் வெளியிடப்பட்ட இந்தக் கண்டுபிடிப்பு, இதுவரை கிடைத்துள்ள கிரகணங்கள் பற்றிய குறிப்புகளில் மிகப்பழமையானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வான நிகழ்வுகளை ஆரம்ப கால நாகரிகங்கள் இந்த அளவுக்கு புரிந்துகொண்டதை ரிக் வேத குறிப்புகள் ஆதாரப்படுத்துகின்றன.