ஆர்டிக் பிரதேசத்தில் உள்ள உறைபனி மிக விரைவில் முழுவதுமாக அழியும் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ஆர்டிக் பிரதேசத்தின் உறைபனி 2040 களில் முழுவதுமாக அழியும் என கூறப்பட்டது. தற்போது, இது 2020 கள் அல்லது 2030களிலேயே இந்த நிலையை எட்டும் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. உலக வரலாற்றில் முதல் முறையாக, ஆர்டிக் பிரதேசத்தின் உறைபனி முழுவதுமாக அழியும் நிலை ஏற்படும் என கொலரோடோ பல்கலைக்கழகத்தின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான விரிவான அறிக்கை நேச்சர் ரிவ்யூஸ் எர்த் அண்ட் என்விரான்மென்ட் என்ற இதழில் வெளியாகி உள்ளது. உறைபனி முழுவதுமாக அழியும் என்பதற்கான அர்த்தம் 1 மில்லியன் சதுர கிலோமீட்டருக்கு குறைவாக பனி இருக்கும் என்பதாகும். இதன் காரணமாக, மிகப்பெரிய அளவிலான சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும் என அஞ்சப்படுகிறது.