இந்திய வீரர் பிரனோய் மற்றும் சமீர் வர்மா ஆகியோர் ஆஸ்திரேலியா ஓபன் பேட்மிட்டன் தொடரில் கால் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் ஓபன் பேட்மிட்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் பிரனோய், பிரேசில் வீரரான மிஷா ஜெல்பர் மேனுடன் மோதினார். இதில் பிரனோய் 21-12, 21 - 15 என்ற கணக்கில் மிஷா ஜில்பர்மேன்னை வீழ்த்தினார். இதன் மூலம் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.
அதன் மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் சமீர் வர்மா சிங்கப்பூர் வீரரான லோ கீன் யூவும் மோதினார். அதில் சமீர் வர்மா 21-14, 14-21,21-19 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்