வங்காளதேசத்தில் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சிக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் 150 க்கும் அதிகமானோர் பலியாகினர். அதையடுத்து வங்கதேசத்தில் நடைபெற்ற வன்முறைக்கு காரணமான ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் மாணவர் பிரிவான இஸ்லாமிய சதாரா ஷபீர் என்ற அமைப்பை வங்காள அரசு தடை செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாட்டின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. ஜமாத் இஸ்லாமிக் கட்சி அரசின் இந்த அறிவிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த கட்சி அளித்துள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது, ஆளும் கட்சியின் முடிவு சட்டத்திற்கு எதிரானது, சட்டவிரோதமானது மற்றும் அரசியல் அமைப்பிற்கு எதிரானது என்று கூறியுள்ளது.