இஸ்ரேலுக்கு 1 பில்லியன் டாலர் மதிப்பில் ஆயுத உதவி வழங்கும் அமெரிக்கா

May 15, 2024

இஸ்ரேல் ராணுவம் ராஃபா நகர் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இது சர்வதேச அளவில் கடும் கண்டனங்களை பெற்றுள்ளது. இந்த சூழலில், இஸ்ரேலுக்கு கூடுதலாக 1 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுத உதவி வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. நேற்றைய தினம், அமெரிக்கா சார்பில் 1 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுத உதவி இஸ்ரேலுக்கு வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. ஆனால், ஆயுதங்கள் எப்போது விநியோகிக்கப்படும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. தற்போதைய நிலையில், காசா போரில் அதிகமான பொதுமக்கள் […]

இஸ்ரேல் ராணுவம் ராஃபா நகர் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இது சர்வதேச அளவில் கடும் கண்டனங்களை பெற்றுள்ளது. இந்த சூழலில், இஸ்ரேலுக்கு கூடுதலாக 1 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுத உதவி வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம், அமெரிக்கா சார்பில் 1 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுத உதவி இஸ்ரேலுக்கு வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. ஆனால், ஆயுதங்கள் எப்போது விநியோகிக்கப்படும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. தற்போதைய நிலையில், காசா போரில் அதிகமான பொதுமக்கள் உயிர் இழந்த காரணத்தால், அமெரிக்கா உதவிகளை நிறுத்தி உள்ளது. இந்த சூழலில் நேற்று உதவிகள் வழங்கப்படுவதாக புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட 700 மில்லியன் டாலர்களுக்கு பீரங்கிகள், 500 மில்லியன் டாலர்களுக்கு ராணுவ வாகனங்கள் மற்றும் 60 மில்லியன் டாலர்களுக்கு ரோந்து வாகனங்கள் அனுப்பப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu