வங்காளதேசத்தில் சிறையில் மோதல் ஏற்பட்டதில் 518 கைதிகளில் தப்பியுள்ளனர்.
வங்காள தேசத்தில் ஏற்பட்ட கலவரம் காரணமாக ஷெப்பூர் சிறையில் மோதல் வெடித்தது. நேற்று ஏற்பட்ட இந்த மோதலில் சுமார் 518 கைதிகளில் தப்பியுள்ளனர். இவர்களில் சிலரிடம் பயங்கர ஆயுதங்கள் இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. இந்த சிறைச்சாலையானது இந்தியா - வங்காளதேச எல்லையில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதன் காரணமாக இந்திய எல்லைப் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்கு எல்லையில் மோதல் ஏற்படுவதை தடுக்க எல்லை பாதுகாப்பு படை அதன் பணியை அதிகரித்துள்ளது. தப்பி ஓடிய சிறை கைதிகளில் 20 பேர் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.