லெபனானில் வசிக்கும் தங்களது குடிமக்களை விரைவில் நாட்டை விட்டு வெளியேறுமாறு இங்கிலாந்து அரசு எச்சரித்துள்ளது.
லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக, அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், லெபனானில் வசிக்கும் தங்களது குடிமக்களை விரைவில் நாட்டை விட்டு வெளியேறுமாறு இங்கிலாந்து அரசு எச்சரித்துள்ளது. போரின் பதற்றம் தீவிரமாக இருப்பதால், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏவுகணை மற்றும் வான்வழி தாக்குதல்கள் தொடர்ந்து நடக்கவுள்ளன. இதனால் மோதல் தொடர்பாக பதற்றம் உருவாகியுள்ளது. நிலைமை மோசமடையும் போது, நாங்கள் உடனடியாக வெளியேற்ற முடியாது என்று இங்கிலாந்து வெளியுறவுத் துறை செயலாளர் டேவிட் லேமி கூறியுள்ளார். மேலும் அவர் அரசு சார்பில் எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது என்றும், மோசமான நிலைமை உருவாகுமானால் மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு செல்லுமாறு எச்சரித்துள்ளார்.