இந்திய பங்குச் சந்தை இன்று ஏற்றத்தாழ்வுடன் காணப்படுகிறது. ஏற்றம் பெற்று வந்த பங்குச் சந்தை, இறுதி நேரத்தில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்தது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 81455.4 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 24857.3 புள்ளிகளிலும் நிறைவடைந்துள்ளது. முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் இது 0.1% உயர்வாகும்.
இன்றைய வர்த்தகத்தில், டாடா மோட்டார்ஸ், அதானி பவர், டாடா ஸ்டீல், இன்ஃபோசிஸ், பிலிப்ஸ் கார்பன், அதானி ட்ரான்ஸ்மிஷன், எஸ் வங்கி, வோடபோன், சுஸ்லான் எனர்ஜி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியவை ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், டிசிஎஸ், ரிலையன்ஸ், ஐடிசி, எக்சைடு இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, அதானி கிரீன் போன்றவை வீழ்ச்சடைந்துள்ளன.