கலிபோர்னியா காட்டுத்தீ காரணமாக 4,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயானது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் அளவை விட பெரியதாக வளர்ந்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கானோர் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பலத்த காற்று மற்றும் வறண்ட நிலை காரணமாக தீப்பிழம்புகள் வேகமாக பரவி, 520 சதுர மைல்களுக்கு மேல் தீ எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். ஆனால் தீயின் அளவு மற்றும் தொலைதூர இடம் ஆகியவற்றால் முயற்சிகள் தடுக்கப்படுகின்றன. ஆளுநர் அவசரகால நிலையை அறிவித்துள்ளார். மீப்பு பணிகள் நடைபெறுகின்றன. கடுமையான வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக தீ வேகமாக பரவி வருகிறது.