பங்கு பிரிப்பு இன்று முதல் அமல் - கனரா வங்கி பங்கு மதிப்பு 5% உயர்வு

May 15, 2024

இன்று முதல் கனரா வங்கியின் பங்கு பிரிப்பு நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதனை முன்னிட்டு, இன்றைய வர்த்தகத்தில் கனரா வங்கி பங்கு மதிப்பு கிட்டத்தட்ட 5% அளவுக்கு உயர்ந்து வர்த்தகமானது. கனரா வங்கியின் நிர்வாகக் குழு, அதன் பங்குகளை 1:5 ரேஷியோவில் பிரிப்பதற்கு திட்டமிட்டு இருந்தது. இது, இன்று முதல் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, 10 ரூபாய் பேஸ் வேல்யூ கொண்ட ஒரு பங்குக்கு எதிராக, 2 ரூபாய் பேஸ் வேல்யூ கொண்ட 5 பங்குகள் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும். இதனால், கனரா […]

இன்று முதல் கனரா வங்கியின் பங்கு பிரிப்பு நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதனை முன்னிட்டு, இன்றைய வர்த்தகத்தில் கனரா வங்கி பங்கு மதிப்பு கிட்டத்தட்ட 5% அளவுக்கு உயர்ந்து வர்த்தகமானது.

கனரா வங்கியின் நிர்வாகக் குழு, அதன் பங்குகளை 1:5 ரேஷியோவில் பிரிப்பதற்கு திட்டமிட்டு இருந்தது. இது, இன்று முதல் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, 10 ரூபாய் பேஸ் வேல்யூ கொண்ட ஒரு பங்குக்கு எதிராக, 2 ரூபாய் பேஸ் வேல்யூ கொண்ட 5 பங்குகள் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும். இதனால், கனரா வங்கியில் அதிக சில்லறை முதலீடுகள் குவியும் என கருதப்படுகிறது. முன்னதாக, கனரா வங்கியின் காலாண்டு முடிவுகள் சாதகமான நிலையில் வெளியாகி உள்ளது. மேலும், கடந்த ஆண்டு கனரா வங்கியின் முதலீட்டாளர்களுக்கு 92% ரிட்டர்ன் கிடைத்துள்ளது. எனவே, இன்றைய பங்கு பிரிப்பு நடவடிக்கைக்கு வரவேற்பு பெருகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu