கேரளாவிற்கு சொந்தமான முதல் விமான நிறுவனமான ஏர் கேரளாவிற்கு மத்திய அரசு அனுமதித்த அளித்துள்ளது.
கேரளா அரசின் ஏர் கேரளா விமான திட்டமானது 2005 ஆம் ஆண்டு முதல்வர் உமன் சாண்டியால் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் வளைகுடா நாடுகளுக்கு குறைந்த செலவில் விமான சேவை இயக்குவதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டதும் எனினும் இது கைகூடவில்லை. இந்நிலையில் இதனை அபி அகமது மற்றும் அயுப் கல்லடா ஆகிய வளர்ந்து வரும் தொழிலதிபர்கள் மீண்டும் இந்த திட்டத்தை உருவாக்கினர். இதனைத் தொடர்ந்து 19 வருடங்கள் கழித்து இந்த திட்டம் இப்பொழுது சாத்தியமாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏர் கேரளா விமான நிறுவனம் தொடங்க மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளது. இதன்படி 2025 ஆம் ஆண்டு முதல் ஏர் கேரளா நிறுவனம் உள்நாட்டு விமான சேவைகளை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது