தாம்பரம் பணிமனை மற்றும் சிக்னல் மேம்பாட்டு பணிகள் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தாம்பரம் பணிமனை மற்றும் சிக்னல் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை 27 விரைவு ரயில்கள் பல்வேறு இடங்களில் இருந்து இயக்கப்படுகிறது. அதன்படி திருச்சி - பகத் கி கோத்தி, காரைக்கால் - லோக்மான்ய திலக் உள்ளிட்ட 10 ரயில்கள் தாம்பரம் வழியாக தாம்பரம் வழியாக இயக்கப்படுவதற்கு மாறாக அரக்கோணம் செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தாம்பரம் - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் அந்தியோதயா விரைவு ரயில் சேவை இரு மார்க்கத்திலும் முழுவதாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் பல்லவன் விரைவு ரயில், வைகை எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளிட்ட ரயில்கள் செங்கல்பட்டு வரை இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.