சீன ஓபன் பேட்மிண்டன் தொடரில், இந்தியாவின் மாளவிகா பன்சோத் காலிறுதிக்கு முன்னேறினார்.
சீனாவில் நடக்கும் சீன ஓபன் பேட்மிண்டன் தொடரில், இந்திய வீராங்கனை மாளவிகா பன்சோத் 2வது சுற்றில் ஸ்காட்லாந்து வீராங்கனை கில்மோரை எதிர்கொண்டு வெற்றி பெற்றார். பன்சோத், 21-17, 19-21, 21-16 என்ற கணக்கில் இந்த போட்டியை வென்று காலிறுதிக்கு முன்னேறினார். நாளை, அவர் ஜப்பான் வீராங்கனை அகானே யமாகுச்சியுடன் மோதுவார்.