ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் குல்காம் மாவட்டத்தில் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 4 பாதுகாப்புப் வீரர்கள் காயம் அடைந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில், தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 பாதுகாப்புப் படை வீரர்கள் காயமடைந்தனர். இங்குள்ள தேவசார் பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிரான சுற்றிவளைப்பு தொடங்கப்பட்டது. அப்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மும்தாஜ் அலிக்கு லேசான காயம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.