காங்கிரஸ் கட்சி 10 ஆண்டுகளுக்கு பின் நெல்லை தொகுதியில் போட்டியிடுகிறது.
பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் திமுக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது. அதன்படி திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் ஒன்பது தொகுதிகளிலும் புதுச்சேரி தொகுதியும் என பத்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் நெல்லை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி 2014 ஆம் ஆண்டு நெல்லை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நெல்லையில் களமிறங்க உள்ளது.