பிரபல யூடுயூபர் சவுக்கு சங்கரை மே 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
யூடுயூபர் சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவானதால் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். இதனை அடுத்து சவுக்கு சங்கரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க 4வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஒரு நாள் போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில் சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கருக்கு மே 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது