குரேசியா ஓபன் டென்னிஸ் தொடரில் இத்தாலி வீரர் முசெட்டி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.
குரேசியா ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்று ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இத்தாலி வீரர் லாரன்ஸ் முசெட்டி - அர்ஜென்டினா வீரர் மார்கோ உடன் மோதினார். இதில் முசெட்டி 6-4,6-3 என்ற நேர் செட் கணக்கில் மார்க்கோவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அதனை தொடர்ந்து இன்று நடைபெற உள்ள காலிறுதியில் முசெட்டி, செர்பிய வீரர் டுசேன் லஜோவிக்கை எதிர்கொள்ள உள்ளார்.