தமிழகத்தில் ஒன்பது பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி மறுக்கப்பட்டு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 476 பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகின்றன. இதில் கடந்த ஆண்டு 442 பொறியியல் கல்லூரிகளுக்கு மட்டுமே மாணவர் சேர்க்கைக்கான அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது நடப்பு ஆண்டில் 433 கல்லூரிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதில் மாணவர் சேர்க்கை இல்லாதது, போதிய உள் கட்டமைப்பு வசதிகள் இல்லாது போன்ற காரணங்களுக்காக தமிழகத்தில் உள்ள ஒன்பது பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி மறுக்கப்பட்டு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.