தெலுங்கானா மாநிலம் சங்கா ரெட்டி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
எஸ் பி ஆர்கானிக் லிமிடெட் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் தொழிற்சாலையில், நேற்று மாலை ரசாயன உலை வெடித்தது. இதில் ஆலையில் இருந்த 16 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தினால் தொழிற்சாலை வளாகத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி இன்று வரை தொடர்ந்தது. காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து எவ்வாறு நேர்ந்தது என்பது பற்றி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.