தமிழகத்தில் 4 முதல் 9ம் வகுப்புகளுக்கான இறுதித் தேர்வுகளின் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 4வது முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அதில் பத்தாம் தேதி நடைபெற இருந்த அறிவியல் தேர்வு 22ஆம் தேதிக்கும், 12ஆம் தேதி நடைபெறும் இருந்த சமூக அறிவியல் தேர்வு 23ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் உருது பள்ளிகளுக்கு மட்டும் அறிவித்த விடுமுறையை அனைத்து பள்ளிகளுக்குமாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.