இலங்கையில், சர்வதேச எல்லையை கடந்த 35 தமிழக மீனவர்களுக்கு ₹1.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
பாம்பன் மீனவர்கள் 35 பேர் கடந்த மாதம் 8-ம் தேதி, புத்தளம் கடல் பகுதியில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். சிறைக்காவலில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு, இவர்களுக்கு ரூ.1.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அபராதத்தை கட்டாதால் 3 மாத சிறை தண்டனை எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு
முன்னதாக, தூத்துக்குடி மாவட்டத்துக்கு உட்பட்ட 10 மீனவர்களுக்கு ரூ.3.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது.