நைஜீரியாவில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 49 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு ஆப்பிரிக்காவின் நைஜீரியாவின் வடகிழக்கு மாகாணங்கள் ஜிஜாவா, அடமவா, மற்றும் தரபாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை மற்றும் வெள்ளத்தால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. சாலைபோக்குவரத்து மற்றும் மின் இணைப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 49 பேர் உயிரிழந்தனர், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. மேலும் கனமழை தொடர்ந்து பெய்யக்கூடும் என்பதால் சூழ்நிலை மோசமாக இருக்க வாய்ப்பு உள்ளது.