கௌதம் அதானி, அடுத்த 8 ஆண்டுகளில் அதானி குழுமத்தின் தலைவர் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம், அவரது மகன்களான கரண் அதானி மற்றும் ஜீத் அதானி ஆகியோர், 2030-களின் தொடக்கத்தில் தலைமை பொறுப்பை ஏற்க உள்ளனர். தற்போதைய நிலையில், அதானி துறைமுகங்களின் தலைமை செயல் அதிகாரியான கரண் அதானி, தந்தைக்கு பிறகு அதானி குழுமத்தின் தலைவராக பொறுப்பேற்க உள்ளார். அதானி குழும இயக்குனர் ஜீத் அதானி, நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பை ஏற்கிறார். இதன் மூலம், 250 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புடைய துறைமுகங்கள், விமான நிலையங்கள், எரிசக்தி மற்றும் பிற துறைகளில் பரந்து விரிந்திருக்கும் கௌதம் அதானியின் சாம்ராஜ்ஜியம், அவரது வாரிசுகளிடம் ஒப்படைக்கப்படுகிறது.