பிப்ரவரி மாதம் நடைபெற்ற குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் ஜனவரி 12ஆம் தேதி வெளியாக உள்ளது.
டிஎன்பிஎஸ்சி கடந்த ஓராண்டில் 15 தேர்வுகளுக்கான முடிவுகளை வெளியிட்டுள்ளது.இந்நிலையில் பிப்ரவரியில் நடைபெற்ற குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் ஜனவரி 12-ம் தேதி வெளியாகும் இது 5777 ஆக இருந்த பணியிடங்கள் நிலையில் தற்போது 248 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் குரூப்-1 சேவைகளுக்கான உதவி வனக்காப்பாளர் பணியிடங்களுக்கான முதன்மை தேர்வுகளில் முடிவுகளும் மாதத்திற்குள் வெளியிடப்படும். அதேபோன்று 95 குரூப்-1 பதிவுகளுக்கான முதன்மை தேர்வு, 11 மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கான முதன்மை தேர்வு, சுற்றுலா அலுவலருக்கான எழுத்து தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வு முடிவுகள் பிப்ரவரியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.