நைஜீரியாவில் பயங்கரவாதிகள் 287 பள்ளி மாணவர்களை கடத்தியுள்ளனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் 287 பள்ளி மாணவர்கள் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளனர். அந்நாட்டின் வடக்கு பகுதியை சேர்ந்த கடனா மாகாணத்தில் பள்ளி ஒன்றுக்கு பயங்கரவாதிகள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். பின்னர் அவர்கள் அங்கு இருந்து மாணவர்களை கடத்தி சென்றதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, கடந்த 2014 ஆம் ஆண்டு இன்னொரு வடக்கு மாகாணமான போர்னோவின் சிபோகு கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை பயங்கரவாதிகள் கடத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தினர். அந்த சம்பவத்திற்கு பிறகு வடக்கு நைஜீரியாவில் இது போன்ற கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.