ஹாங்சோ ஓபன் டென்னிஸ் தொடரில் ஜீவன் நெடுஞ்செழியன் மற்றும் விஜய் சுந்தர் பிரசாந்த் சாம்பியன் பட்டம் வென்றனர்.
சீனாவில் நடைபெற்ற ஹாங்சோ ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில், இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன் மற்றும் விஜய் சுந்தர் பிரசாந்த், ஜெர்மனியின் கான்ஸ்டன்டைன்-ஹென்ரிக் ஜெபென்ஸ் ஜோடியுடன் மோதின. முதல் செட்டை இந்திய ஜோடி 4-6 என இழந்த போதிலும், அடுத்த இரு செட்களில் 7-6 (7-5), 10-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றனர்.