இந்தியாவின் உள்நாட்டு விமான போக்குவரத்தில் நல்ல முன்னேற்றம் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, ஜனவரி முதல் மே வரையிலான 6 மாத காலத்தில், உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை 36% உயர்ந்துள்ளது. இண்டிகோ, விஸ்தாரா மற்றும் ஏர் ஏசியா விமான நிறுவனங்கள் உள்நாட்டு விமான போக்குவரத்தில் கணிசமான பங்களிப்பை பதிவு செய்துள்ளன.
கொரோனாவுக்கு பிறகு, விமான பயணிகளின் எண்ணிக்கை இத்தகைய உயர்வை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அரசாங்க தரவுகளின் படி, கடந்த 6 மாதத்தில் 636.07 லட்சம் உள்நாட்டு விமான பயணிகள் வரவு பதிவாகியுள்ளது. மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பால் இந்த உயர்வு பதிவாகியுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அதே வேளையில், விமான பயணச்சீட்டுக்கான கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளதாக புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.