இஸ்ரேலில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு, அந்நாட்டில் வாழும் இந்தியர்களுக்கான முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
“இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருக்க வேண்டும். உள்நாட்டு அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றி தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். பாதுகாப்பு பதுங்குமிடங்களுக்கு அருகில் இருப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.” இவ்வாறு கூறியுள்ளது.
இந்திய தூதரகம் நிலையை கவனித்து வருகிறது. பாதுகாப்பை உறுதி செய்ய இஸ்ரேல் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளது. அவசரநிலையினால், தூதரகத்தின் 24/7 உதவி எண்ணுக்களை தொடர்பு கொள்ள வேண்டும். மேலும், தூதரகத்தில் பதிவு செய்யாத இந்தியர்கள் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.