இந்தோனேசியா அருகே ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்தது விபத்தானது.
வங்காளதேசத்தில் ஏராளமான ரோஹிங்கியா முஸ்லிம் சமுதாயத்தினர் வாழ்கின்றனர். இவர்கள் அவ்வப்போது கடல் வழியாக மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு படகில் தப்பி செல்கின்றனர். தொடர்ந்து நடந்து வருகிறது இவர்கள் சட்டவிரோதமாக பாதுகாப்பு இல்லாமல் படகில் செல்வதால் விபத்து ஏற்படுகிறது. படகில் அதன் திறனுக்கு மேலான மக்கள் பயணம் செய்வதால் விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழக்கின்றனர். கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகிறது. இந்நிலையில், வங்காள தேசத்திலிருந்து நூறுக்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் படகு ஒன்றில் இந்தோனேசியா சென்று கொண்டிருந்தனர்.
இந்தோனேசியாவின் வடக்கு பகுதியில் உள்ள கோலா பூடான் கடற்கரையில் 25 கிலோ மீட்டர் தொலைவில் படகு சென்று கொண்டிருந்தபோது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் படகில் இருந்த அகதிகள் கடலில் விழுந்து தவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து இந்தோனேசியா கடலோர படையினர் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 60 பெயரை அவர்கள் பத்திரமாக மீட்டனர். மற்றவர்களுடைய நிலை என்ன என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை. அவர்களை கடலோர படையினர் தேடி வருகின்றனர்.