சுமார் 32,403 கோடி ரூபாய் அளவில் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததாக இன்ஃபோசிஸ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜிஎஸ்டி அதிகாரிகள் இந்நிறுவனத்திற்கு ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இந்த குற்றச்சாட்டு 2016 முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கியது. இன்ஃபோசிஸ் நிறுவனம் இந்த நோட்டீஸை மறுபரிசீலனை செய்து வருகிறது. மேலும், நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, இதற்கு பதிலளிப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், இந்த குற்றச்சாட்டை எதிர்த்து போராட தங்களிடம் வலுவான ஆவணங்கள் இருப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளது.