டெல்லியில் பெண்களுக்கான சர்வதேச வாள்வீச்சு போட்டியில் 58 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்
இந்திய வாள்வீச்சு சம்மேளனத்தின் கீழ், டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் சர்வதேச சேட்லைட் பாயில் பிரிவு வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் உலகம் முழுவதிலிருந்தும் 58 வீராங்கனைகள் பங்கேற்கின்றன. தமிழ்நாட்டிலிருந்து 6 வீராங்கனைகள் இந்த போட்டியில் கலந்து கொண்டு உள்ளனர். இது, இந்திய வாள்வீச்சு போட்டியின் முன்னேற்றத்திற்கு முக்கிய மைல் கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.