சென்னை மாநகர பேருந்துகளில் இனி யூபிஐ மூலம் டிக்கெட் பெறும் வசதி நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 50 புதிய பேருந்து சேவையை போக்குவரத்து துறை தொடங்கி வைத்தது. மேலும் டெபிட் கார்டு, யூபிஐ மூலம் பயணிகள் டிக்கெட் பெற வசதியாக மின்னணு டிக்கெட் இயந்திரத்தையும் நடத்துனர்களுக்கு வழங்கியுள்ளது. இதன் மூலம் யூபிஐ முறையை பயன்படுத்தி சென்னை மாநகர பேருந்துகளில் பயணிகள் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய கையடக்க கருவிகள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த முறையை கொண்டு வர தமிழக அரசு ஏற்கனவே திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.