ஹிஸ்புல்லா தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.
இஸ்ரேலின் கோலாம் ஹைட்ஸ் நகரில் உள்ள கால்பந்து மைதானம் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியது. இதில் சிறுவர்கள் 12 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு கூறினார். இதையடுத்து ஹிஸ்புல்லா தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. இதற்கிடையே லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று அந்நாடு எச்சரித்துள்ளது. தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர், பாதுகாப்பு துறை அதிகாரிகள் உட்பட பிற முக்கிய நபர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் பட்சத்தில் ஈரான், எகிப்து போன்றவை இந்த போரில் பங்குபெறும். இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.