ஜப்பானின் இசு தீவுகளுக்கு அருகில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்க புவியியல் ஆய்வு மையமும், உள்ளூர் வானிலை அதிகாரிகளும் சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர். இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஜப்பான் நான்கு பெரிய டெக்டோனிக் தட்டுகளின் மேல் அமைந்துள்ளதால், அந்நாடு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,500 நிலநடுக்கங்களை சந்திக்கிறது. இதில் பெரும்பாலானவை சிறிய நிலநடுக்கங்களாக உள்ளன. மேம்பட்ட கட்டிட நுட்பங்கள் மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட அவசரகால நடைமுறைகளால், பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படும் போதிலும், பாதிப்புகள் ஏற்படாதவாறு கட்டுப்படுத்தப்படுகின்றன.