லெபனானுக்கான அமீரக விமானங்கள் ரத்து

September 25, 2024

இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்துவதால், லெபனானுக்குச் செல்லும் விமானங்களை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் எகிப்து ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. ஹிஸ்புல்லா ஆயுதக் குழுக்களை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கடந்த இரண்டு நாட்களில் 558 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கிழக்கு-மேற்கு நாடுகளின் பயண முனையமாக உள்ள ஐக்கிய அரபு அமீரகம், எதிஹாத் மற்றும் ஃபிளைதுபை உள்ளிட்ட விமானங்களின் இயக்கத்தை நிறுத்தியுள்ளது. அதேபோல், எகிப்தின் ஃபிளாக்‌ஷிப் நிறுவனத்தின் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கைரோவிலிருந்து பெய்ரூட்டுக்கான […]

இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்துவதால், லெபனானுக்குச் செல்லும் விமானங்களை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் எகிப்து ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.

ஹிஸ்புல்லா ஆயுதக் குழுக்களை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கடந்த இரண்டு நாட்களில் 558 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கிழக்கு-மேற்கு நாடுகளின் பயண முனையமாக உள்ள ஐக்கிய அரபு அமீரகம், எதிஹாத் மற்றும் ஃபிளைதுபை உள்ளிட்ட விமானங்களின் இயக்கத்தை நிறுத்தியுள்ளது. அதேபோல், எகிப்தின் ஃபிளாக்‌ஷிப் நிறுவனத்தின் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கைரோவிலிருந்து பெய்ரூட்டுக்கான இரண்டு விமானங்கள் இனி செயல்படாது.

போர் பதற்றத்தின் காரணமாக, இஸ்ரேலுக்குச் செல்லும் சில விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இஸ்ரேலின் தாக்குதலால், தென் லெபனானிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பெய்ரூட் வழியாக பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu