மு.க.ஸ்டாலின் தலைமையில் அமெரிக்கத்தில் முதலமைச்சரின் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமெரிக்காவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டு, சிகாகோவில் லிங்கன் எலக்ட்ரிக், விஷய் பிரிஷிஷன், மற்றும் விஸ்டியன் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார். லிங்கன் எலக்ட்ரிக், செங்கல்பட்டு மாவட்டத்தில் 500 கோடி ரூபாய் முதலீட்டில் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி மையத்தை விரிவாக்குவதாக ஒப்பந்தம் ஏற்பட்டது. விஷய் பிரிஷிஷன், காஞ்சிபுரத்தில் 100 கோடி ரூபாய் முதலீட்டில் சென்சார்ஸ் மற்றும் டிரான்ஸ்டி யூசர்ஸ்உற்பத்தி மையத்தை நிறுவுவதாக ஒப்பந்தம் செய்தது. விஸ்டியன், 250 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் மின்னணு உற்பத்தி மையங்களை நிறுவும். இம்முடிவுகள், தமிழ்நாடு இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.